அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-06-15 11:30 GMT

சிவகாமி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த குருவரெட்டியூர் அருகே உள்ள சன்னிதிகல்மேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சிவகாமி (வயது 50). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு சாலையை கடந்து செல்ல முயன்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக குருசாமி மகன் இளையராஜா என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சிவகாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News