அந்தியூர் அருகே புடவையில் தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

அந்தியூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் புடவையில் தீ வைத்து கொண்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2022-05-07 02:14 GMT

கோகிலா

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள தேர்வீதிகுறுக்கு பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி கோகிலா (வயது 48). கடந்த 30 வருடங்களுக்கு முன்பு, திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கோகிலா மன உளைச்சலில் இருந்து வந்தார்.இந்நிலையில் கடந்த 3ம் தேதி கோகிலா புடவையில் தீ வைத்துக் கொண்டார்.

உடன் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News