அத்தாணி, அம்மாப்பேட்டை பேரூராட்சிகளில் திமுக சார்பில் இருவர் வேட்புமனு தாக்கல்

Erode News Tamil -அத்தாணி மற்றும் அம்மாப்பேட்டை பேரூராட்சிகளில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிக்கான தற்செயல் தேர்தலில் திமுக சார்பில் இருவர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2022-06-24 06:00 GMT

அத்தாணி பேரூராட்சி அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 3வது வார்டு திமுக வேட்பாளர் சாந்திமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.

Erode News Tamil - தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இறப்பு மற்றும் பதவி விலகல் காரணங்களால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட இடங்களுக்கு தற்போது தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் 2-வது வார்டில் கண்ணன் என்பவரும், அத்தாணி பேரூராட்சியில் 3-வது வார்டில் சாந்திமணி என்பவரும் திமுக வேட்பாளர்களாக அந்தந்த பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு மனுதாக்கல் செய்தனர்.


இந்த இரண்டு பேரூராட்சிகளிலும் இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த திமுக வேட்பாளர்களான சித்துரெட்டி , ஐயப்பன் ஆகிய இருவரும் மாரடைப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, நடைபெறவுள்ள தற்செயல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஜூலை 9-ஆம் தேதியும், 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News