கோபி அருகே கூகலூரில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே கூகலூரில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (மார்ச் 5ம் தேதி) நடைபெற்றது.;
கூகலூர் கே.தொட்டிபாளையம் பகுதியில் நடந்த முகாமில் பொதுமக்கள் காசநோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்ட போது எடுத்த படம்.
கோபி அருகே கூகலூரில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (மார்ச் 5ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் கோபி வட்டாரம் கூகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்குட்பட்ட கூகலூர் பேரூராட்சியில் கே.தொட்டிபாளையம் பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன்பாதிப்புகள், காச நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், காசநோய்க்கான சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வதின் அவசியம், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு குறித்து விளக்கமாக சுகாதார நலக்கல்வி வழங்கப்பட்டது.
இம்முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் , காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வாசுதேவன், காசநோய் சிகிச்சை பார்வையாளர் விவேகானந்தன், சுகாதார ஆய்வாளர் சுஜித், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர், செவிலியர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பெண் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 70 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.