நசியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு, கண்டறிதல் முகாம்
ஈரோடு மாவட்டம் நசியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (ஜன.22) நடைபெற்றது.;
நசியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (ஜன.22) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு வட்டாரம் நசியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோய் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், காசநோய் ஒழிப்பில் பொது மக்களின் பங்கு குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
இந்த முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குநர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மருத்துவ அலுவலர் மரு.ஆதிபராசக்தி, திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதன்சர்மா, காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் லோகநாதன், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தி குழுவினர்கள், நடமாடும் மருத்துவக் குழுவினர்கள், சுகாதார செவிலியர்கள், நசியனூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் 100 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு, நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.