பங்களாப்புதூர் அருகே பவானி ஆற்றில் மிதந்து வந்த முதியவர் உடல்

பங்களாப்புதூர் அருகே உள்ள கள்ளிப்பட்டி பவானி ஆற்றில் முதியவர் உடல் மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-02-27 01:37 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம், பங்களாப்புதூர் அருகே உள்ள கள்ளிப்பட்டி  பவானி ஆற்றில் 60வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து வந்தது. இது குறித்து பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News