60 இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு கட்டிடங்கள் புதிதாக கட்டப்படும்:அமைச்சர் முத்துசாமி

தமிழ்நாடு முழுவதும் இடிந்து விழும் நிலையில் உள்ள 60 அரசு குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Update: 2021-12-28 12:30 GMT

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின் 253-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவுருவ படத்திற்கு தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி , தமிழக சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி , சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு 1 கோடியே 83 லட்சம் ஒதுக்கீட்டில் நினைவு மண்டபம் கட்டப்படுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து வந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு நடைபெற்று வருவதாகவும் , தமிழ்நாடு முழுவதும் உள்ள 193 அரசு குடியிருப்புகளில் 60 இடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும், அந்த 60 இடங்களை இடித்த விட்டு புதியதாக வீடுகள் கட்டப்படும் என்றார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் முத்துசாமி, அரசு தரமான குடியிருப்புகளை கட்டி கொடுத்தாலும் குடியிருப்புவர்கள் அதை நன்றாக பராமரிக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News