சமபந்தி விருந்தை எதிர்த்து முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

அண்ணாவின் நினைவு நாளான இன்று கோயில்களில் சமபந்தி விருந்தை எதிர்த்து முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்.

Update: 2022-02-03 17:00 GMT

இந்து மக்கள் கட்சி சார்பில் தபால் அனுப்பும் போது எடுத்த படம்.

மறைந்த முதல்வர் சி. என் அண்ணாதுரையின் நினைவு நாளான இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நாத்தீகவாதியான அண்ணாவின் நினைவு நாளில் இந்து கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெறுவதாகவும், இதனை கண்டித்தும் வரும் ஆண்டுகளில் இதனை தடுக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் தமிழக முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பிரகாஷ் மாவட்ட தலைவர் தபால் நிலையத்தில் தபால் அனுப்பினார்.

Tags:    

Similar News