பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா: சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.;
சத்தியமங்கலம் அருகே பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் மறுபூஜை விழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக ஈரோடு மண்டல அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற ஏப்ரல் மாதம் 7 மற்றும் 8ம் தேதிகளில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா மற்றும் 14ம் தேதி மறுபூஜை விழாவும் நடக்கிறது .
இதை முன்னிட்டு கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, சத்தி, புளியம்பட்டி, மைசூர், நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.