ஆப்பக்கூடல் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 47 மதுபாட்டில்கள் பறிமுதல்

Erode Police Station -ஆப்பக்கூடல் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 47 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-06-29 04:00 GMT
ஆப்பக்கூடல் காவல் நிலையம் பைல் படம்

Erode Police Station - ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஆப்பக்கூடல் அருகே உள்ள காமநாயக்கம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக ஆப்பக்கூடல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் காமநாயக்கன்பாளையம் சாலையில் ஆய்வு நடத்தினர்.அப்போது அதே பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 40) என்பவர் விற்பனைக்காக 47 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 47 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News