சத்தி அருகே பள்ளி சமையலர் பலி

உயர் இரத்த அழுத்தம் காரணமாக அந்தியூரை சேர்ந்த பள்ளி சமையலர் உயிரிழப்பு.

Update: 2021-12-07 05:45 GMT

பைல் படம்.

அந்தியூர் அருகே உள்ள பட்லூரை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (வயது 57). ஆசனூர் பழங்குடியினர் அரசு மேல்நிலை பள்ளியில் சமையலராக வேலை பார்த்தும், அங்கேயே வசித்தும் வந்துள்ளார். இவருக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்பு நோய் இருந்துள்ளது . நேற்று காலை அறையில் மயங்கி கிடந்தார். மயங்கியவரை, சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, டாக்டர்கள் பரிசோதனை செய்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News