அந்தியூரில் ரூ.3.52 லட்சத்துக்கு வேளாண் விளைபொருட்கள் விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

Update: 2022-05-16 10:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில் 8,058 தேங்காய்கள், குறைந்தபட்ச விலையாக 4 ரூபாய் 25 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 16 ரூபாய் 15 பைசாவிற்கும், 45 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 74‌ ரூபாய் 9 பைசா முதல் 87 ரூபாய் 19 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 9 மூட்டைகள் எள் கிலோ 118 ரூபாய் 37 பைசாவிற்கும், 5 மூட்டைகள் ஆமணக்கு கிலோ 65 ரூபாய் 69 பைசாவிற்கும், 71 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ 23 ரூபாய் 43 பைசாவிற்கும் விற்பனையானது.

இன்றைய வர்த்தகத்தில் மொத்தம் 118.01 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 3 லட்சத்து 52 ஆயிரத்து 31 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags:    

Similar News