சத்தியமங்கலம் அருகே கோவிலுக்குள் புகுந்த மலைப்பாம்பால் பரபரப்பு

சத்தியமங்கலம் அருகே கோவிலுக்குள் புகுந்த 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது;

Update: 2022-01-15 10:45 GMT

கோவிலில் மீட்கப்பட்ட மலைப்பாம்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டம்பாளையம் பகுதியில்,   ரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ளோர் கோயில் வளாகத்தில் மலைப்பாம்பு நடமாடுவதை குறித்து விளாமுண்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பாம்பை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் மலைப்பாம்பை விடுவித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

Tags:    

Similar News