அந்தியூர் அருகே தனியார் நிறுவன தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
அந்தியூர் அருகே தனியார் கெமிக்கல் கம்பெனி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முத்துகுமார கோவில் தெருவை சேர்ந்தவர் சாவித்ரி.இவரது இளைய மகன் விஜயகுமார் (46). விஜயகுமார் தனியார் கெமிக்கல் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.சில ஆண்டுகளுக்கு முன் விஜயகுமாருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும், சபரிக்கண்ணன் மற்றும் சுபிக்ஷா இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், இன்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சபரிக்கண்ணன், தூக்கில் தொங்கிய நிலையில் விஜயகுமாரை பார்த்தார்.இதுகுறித்து, அழுதுகொண்டே சென்ற சிறுவன் விஜயகுமாரின் தாயார் சாவித்திரியிடம் கூறினான்.உடனடியாக விஜயகுமாரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து, அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.