ஈரோடு மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 88 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது;
கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏறு இறங்கு முகமாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 88 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.
மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை -1,03,440
இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,01,883
தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை - 878
மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு - 679
மாவட்டத்தில் நேற்று 7 ஆயிரத்து 644 பேருக்கு பரிசோதனை செய்ததில் 88 பேரும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பரிசோதனை விகிதம் 1.2% ஆகும்.