ஈரோட்டில் நாளை (6ம் தேதி) மின்தடை அறிவிப்பு

ஈரோட்டில் நாளை (6ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-05 13:45 GMT

நாளை மின்தடை (பைல் படம்).

Erode Today News, Erode News - ஈரோட்டில் நாளை (6ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் ஆட்சியர் அலுவலக மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிப்பு பணிகள் நாளை (அக்டோபர் 6) ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

இதனால், நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, மின்தடை ஏதேனும் இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலைய ஆட்சியர் அலுவலக மின் பாதை (காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- டீச்சர்ஸ் காலனி பேருந்து நிறுத்தம், பெருந்துறை ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட நீதிமன்ற அலுவலக வளாகம் மற்றும் தியாகி குமரன் சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News