சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

சத்தியமங்கலம் அருகே உள்ள காவிலிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

Update: 2022-03-13 13:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள காவிலிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் காவிலிபாளையம், கொண்டயம்பாளையம், கூடக்கரை, காராப்பாடி, தொப்பம்பாளையம், வடுகபா ளையம், குப்பன்துறை, மாதம்பாளையம், லாகம்பாளையம், இருகாலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சத்தி மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகரபாண்டியன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News