சத்தியமங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

சத்தியமங்கலம் அடுத்த தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

Update: 2022-01-27 11:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் ஆலாம்பாளையம், எரங்காட்டுர், கரிதொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், தொட்டம்பாளையம், கேடேபாளையம், நால்ரோடு, முடுக்கம்துரை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News