கவுந்தப்பாடி, ஆப்பக்கூடல் பகுதிகளில் நாளை (24ம் தேதி) மின்தடை

கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

Update: 2022-03-23 04:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனால் கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம் எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மாபுரி, கே.புதூர், மாரப்பம்பாளை யம், அய்யம்பாளையம், வேலம்பாளையம், சந்திராபு ரம், பெருமாபாளையம், தன் னாசிப்பட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு. கருக்கம்பாளையம், கண்ணாடிபதூர், மாணிக்க வலசு, அய்யன் வலசு, மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம்பாளையம், செட்டிபாளையம், ஆவரங்காட்டுவலசு, ஆலத்தூர், கவுண்டன்பாளையம்,செராயாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஈரோடு மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ராமசந்திரன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News