அந்தியூர் பகுதியில் நாளை (4ம் தேதி) மின் நிறுத்தம்

Power Cut In Tamilnadu -அந்தியூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-06-03 08:00 GMT

பைல் படம்

Power Cut In Tamilnadu - ஈரோடு மாவட்டம், அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தியூர் புதுப்பாளையம், மைக்கேல்பாளையம் ,நகலூர் , முனியப்பன்பாளையம்,  தோப்பூர் , கொண்டையம்பாளையம் ,  வெள்ளையம்பாளையம் , பிரம்மதேசம் , காட்டூர் , செம்புளிச்சாம்பாளையம் , பருவாச்சி , பச்சாபாளையம்,  பெருமாபாளையம் , சங்கராப்பாளையம் , எண்ணமங்கலம் , கோவிலூர்,  வெள்ளித்திருப்பூர் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது என பவானி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News