கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை (செப்.18) மின்சாரம் நிறுத்தம்

கோபி அருகே உள்ள நல்லகவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

Update: 2022-09-17 12:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே நல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்.18 (ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:-  ல.கள்ளிப்பட்டி, தமிழ் நகர், மின்நகர், வாய்க்கால் ரோடு, செல்லப்பாநகர், கிருஷ்ணாநகர், பெரியார் திடல், நல்லகவுண்டன்பாளையம், தொட்டிபாளையம், கலிங்கியம், அவ்வையார்பாளையம், வெளாங்காட்டு பாளையம், மூலவாய்க்கால் அயலூர், செம்மாண்டம்பாளையம் பாலப்பாளையம், வெள்ளைகவுண்டன்புதூர், கரட்டடிபாளையம் ஆகிய பகுதிகள்‌.

Tags:    

Similar News