அந்தியூரில் டிசம்பர் 2-ம் தேதி மின்சாரம் நிறுத்தம்

பராமரிப்பு பணி காரணமாக அந்தியூர் பகுதியில் வரும் வியாழக்கிழமையன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு.

Update: 2021-11-30 11:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் வருகிற வியாழக்கிழமை (02.12.2021) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அந்தியூர், தவிட்டுப்பாளையம், பிரம்மதேசம், வெள்ளையம்பாளையம், தோப்பூர், முனியப்பன்பாளையம், சின்னத்தம்பிபாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், கெட்டிசமுத்திரம், புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News