கோபிசெட்டிபாளையம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி மாயம்

கோபிசெட்டிபாளையம் அருகே பள்ளிக்கு சென்ற 12ஆம் வகுப்பு மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-02-18 10:30 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். பெயிண்டர். இவருடைய மகள் ஸ்வேதா. மொடச்சூரில் உள்ள நகராட்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற ஸ்வேதா வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, முருகேசன் அளித்த புகாரில் பேரில், கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News