அந்தியூர் அருகே பாக்கெட் சாராயம் விற்றவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே பாக்கெட் சாராயம் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-17 07:15 GMT

கைது செய்யப்பட்ட பெருமாள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த அருகில் வெள்ளித்திருப்பூர் மாத்தூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர், சேலம் மாவட்டம் பாலமலை கெம்மம்பட்டியை சேர்ந்த பெருமாள் (40) என்பதும், அவர் இருசக்கர வாகனத்தில் பாக்கெட்டில் சாராயம் விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 14 பாக்கெட்டுகளில் சுமார் அரை லிட்டர் அளவுள்ள சாராயம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Tags:    

Similar News