சென்னிமலை: கடத்தப்பட்ட வாலிபர் வீடு திரும்பினார்

சென்னிமலையில் கடத்தப்பட்ட எம்பிஏ பட்டதாரி வாலிபர் வீடு திரும்பியது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை.

Update: 2021-12-11 11:15 GMT

பைல் படம்.

சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). எம்.பி.ஏ பட்டதாரி. இவர் மல்டி லெவல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் பலர் பணம் முதலீடு செய்தனர். முதலீடு செய்தவர்களுக்கு ரமேஷ் பணத்தை திரும்ப தரவில்லை என் கூறப்படுகிறது. இந்த நிலையில் இரவு ரமேஷ் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது சிலர் அவரது வீட்டின் கதவை தட்டினர். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு ரமேஷ் கதவை திறந்து வெளியே வந்தார். வீட்டின் வெளியே 4 பேர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் திடீரென ரமேசின் தலையில் தடியால் தாக்கினர், தொடர்ந்து அவர்கள் ஆம்னி வேனில் ரமேசை கடத்தி சென்றனர்.

இதனை கண்ட ரமேஷின் தாய் இது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட ரமேசை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் ரமேஷ் சென்னிமலை போலீஸ் நிலையம் வந்தார். அப்போது அவரிடம் போலீசார் விசாரித்தனர். இதில் தொழிலில் முதலீடு செய்த 4 பேர் தன்னை ஒரு ஆம்னி வேனில் கடத்தி கோவை தொண்டாமுத்தூர் பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களே தன்னை அனுப்பி விட்டனர் என கூறினார். ரமேசை கடத்தி சென்றது யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News