அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-05-21 11:00 GMT

அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் செல்லம்பாளையத்தை சேர்ந்தவர் குருசாமி. விவசாயியான இவர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவருடைய ஆட்டை 2 பேர் திருடி இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வெள்ளத்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், எண்ணமங்கலம் அருகே உள்ள மூலக்கடை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கோவை பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தை சேர்ந்த செல்லராஜ் மகன் அஜித்குமார் (வயது 26), என்ப தும், அவர் தான் குருசாமியின் ஆட்டை திருடியதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அஜித்குமார் கொடுத்த தகவலின் பேரில் இந்த திருட்டில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம் தோப்பு மண்டபத்தை சேர்ந்த கருப்பண்ணண் மகன் திருமலை (23) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News