ஈரோட்டில் சரக்கு ஆட்டோவை திருடியவர் கைது

சூரம்பட்டிவலசு பகுதியில் சரக்கு ஆட்டோவை திருடி, கரூர் சென்ற நபரை போலீசார் 24 மணி நேரத்தில் கைது செய்தனர்.

Update: 2022-02-05 15:45 GMT

கைது செய்யப்பட்ட ஜோதிகுமார்.

ஈரோடு மாவட்டம் கைகாட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் சொந்தமாக சரக்கு ஆட்டோவை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்துள்ளார். இதனையடுத்து, சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த ஜோதிகுமார் என்பவர் சரக்கு ஆட்டோவை  ஒட்டி வந்துள்ளார். ஜோதிகுமாரின் ஒழுங்கின நடவடிக்கைகளால், ரங்கநாதன் ஜோதிகுமாரை வேலையில் நீக்கி விட்டு, புதிய டிரைவராக, ராசு என்பவரை நியமித்துள்ளார்.

ராசு வேலையை முடித்துவிட்டு, கடந்த 2ஆம் தேதி வீரப்பம்பாளையம்  பகுதியில் சரக்கு ஆட்டோவை நிறுத்திவிட்டு, சாவியை வாகனத்திலேயே வைத்து விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், 3ஆம் தேதி காலை சென்று பார்த்தபோது, சரக்கு ஆட்டோ காணமால் போகவே இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசாரிடம் புகார் தெரிவிக்த்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், சரக்கு ஆட்டோவை சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்த ஜோதிகுமார் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து கரூர் மாவட்டம் குளித்தலை நோக்கி சென்ற ஜோதிகுமாரை  போலீசார் கைது செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News