அந்தியூர் அருகே கஞ்சா செடி வளர்த்தவர் கைது

அந்தியூர் அடுத்த பர்கூரில் தோட்டத்தில் கஞ்சா செடியினை வளர்த்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-03 11:15 GMT

கஞ்சா செடி பயிரிட்ட கண்ணப்பன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலனை பகுதியில் கஞ்சா செடி பயிரிட்டு இருப்பதாக பர்கூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தோட்டத்தில்  சோதனை செய்தனர். அப்பொழுது அதே பகுதியில் கண்ணப்பன் என்பவர் மக்காச்சோள தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பர்கூர் போலீசார் கண்ணப்பன் என்பவரை கைது செய்து, கஞ்சா செடியினையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News