கோபி: பங்களாப்புதூர் அருகே மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது

பங்களாப்புதூர் அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக மது பாட்டில்களை வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-26 14:45 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் மற்றும் போலீசார் கொங்கர்பாளையம் அருகே உள்ள உப்புபள்ளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்தார்.இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கொங்கர்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வீரன் என்பதும், மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்து இருந்ததும் தெரிய வந்தது.இதையடுத்து அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரனை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News