சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2024-09-28 04:15 GMT

சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் எடுக்கப்பட்ட படம்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய்மை பாரத இயக்கம், தூய்மையே சேவை இயக்கம் 2024, திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு, திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு அணிவகுப்பு பேரணி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உமாசங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் முன்னிலை வகித்தார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல்வகாப், ராதாமணி, ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


கல்லூரியில் பயிலும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர்கள் ஆங்காங்கே உள்ள ஒரு முறை பயன்படுத்தும் குப்பைகளை சேகரித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஒப்படைத்தனர்‌. பேரணி அரசு கலைக் கல்லூரி முதல் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் கல்லூரி மாணவ மாணவியர்கள் 1,200க்கும் மேற்பட்டோர் பேரணியாக அணிவகுத்து தூய்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, குறித்த பதாகைகள் ஏந்தி அணிவகுத்து சென்றனர்.

முடிவில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார். முன்னதாக, கல்லூரி வளாகத்தில் தூய்மையை வலியுறுத்தி மரக்கன்றுகளை ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உமாசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் ஆகியோர் நட்டனர்.

Tags:    

Similar News