ஈரோடு மாவட்டத்தில் டிச.4ம் தேதி 13வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 13வது தடுப்பூசி முகாம் டிசம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2021-12-02 14:30 GMT

இது குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் வரும் டிசம்பர் 4-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில், 13வது தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் 467 மையங்களில் 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயது நிரம்பிய அனை வரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும், ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் 2வது தவணை தடுப்பூசியினை இந்த தடுப்பூசி முகாமில் செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News