கீழ்வாணியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி‌ கிராம சபை கூட்டம்

அந்தியூர் அடுத்த கீழ்வாணியில் பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி, நாளை (24ந் தேதி) கிராம சபை கூட்டம் நடக்கிறது

Update: 2022-04-23 04:00 GMT

கோப்பு படம்

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக  இயக்குனர் உத்தரவின் பேரில், நாளை (24ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த கீழ்வாணி ஊராட்சியில் சென்னிமலைகவுண்டன்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நாளை காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தில், நீடித்த வளர்ச்சி இலக்குகளாக கிராம ஊராட்சி வறுமை ஒழிப்பு, ஊராட்சிகளில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நலவாழ்வு வாழ்தல், அனைத்து குழந்தைகளும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வது.அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில், நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்துதல் உட்பட 12 நீடித்த வளர்ச்சி தொடர்பான பொருள்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கிராம பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம்.

Tags:    

Similar News