ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் ஒருவர் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் 16 நாட்களுக்கு பிறகு, நேற்று மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

Update: 2022-05-18 00:44 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 16 நாட்களுக்கு நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 673 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 938 பேர் குணமடைந்தனர். புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர் மட்டும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 734 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

Similar News