கோபிச்செட்டிப்பாளையம் அருகே தவறி விழுந்த மூதாட்டி பலி

கோபி அருகே தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-01 11:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே குப்பாண்டவர் வீதியை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 65). கூலி தொழிலாளி. சில நாட்களுக்கு முன், வீட்டின் அருகேயுள்ள கழிப்பிடத்துக்கு செல்லும் வழியில் தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கோபிச்செட்டிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News