ஈரோட்டில் 1000-ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 973 பேருக்கு கொரோனா உறுதியானதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2022-01-21 14:00 GMT
பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களாக 900-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.நேற்று  3 ஆயிரத்து 991 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 919 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது.இந்தநிலையில் இன்று ஒரே நாளில் 973 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 031 ஆக உயர்ந்தது.

இதில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 361 பேர் குணமடைந்து உள்ளனர்.மாவட்டத்தில் இன்று மட்டும் 437 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். தினமும் கொரோனாவுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. தற்போது 4 ஆயிரத்து 949 பேர் சிகிச்சையில் உள்ளனர். தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 721 ஆக உள்ளது.

Tags:    

Similar News