கீழ்வாணி டி.ஆர்.காலனி முத்துமாரியம்மன் கோயிலில் நாளை பொங்கல் விழா

கீழ்வாணி டி.ஆர்.காலனி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

Update: 2022-05-24 19:30 GMT

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் முத்துமாரியம்மன்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வாணி டி.ஆர்.காலனியில் உள்ள கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த வாரம் 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் பூச்சாட்டுதல் துவங்கியது .இதனைத்தொடர்ந்து 18ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து, 19ம் தேதி கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து, விழா நாட்களின் போது தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நாளை 26ம் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

காலை 5 மணிக்கு பவானி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் மற்றும் இரவு 8 மணிக்கு பெரும் பூஜை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.இதனையடுத்து, நாளை மறுநாள் 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கம்பம் பிடுங்குதல் மற்றும் மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளன. வரும் 28ம் தேதி சனிக்கிழமை பொங்கல் விழாவையொட்டி டி.ஆர்.காலனி அனைத்து மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில், அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News