சத்தியமங்கலம்: கடம்பூர் அருகே சாலையை கடந்த புலி!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே சாலையை கடந்த சென்ற புலியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.;

Update: 2025-04-15 11:40 GMT

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே சாலையை கடந்த சென்ற புலியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கடம்பூர் வனச்சரகத்தில் காட்டு யானைகள், புலிகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் செடி, கொடி கள் காய்ந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விலங்குகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி வனப்பகுதி சாலையை கடந்து வருகின்றன.

இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி கடம்பூர்- மாக்கம்பாளையம் செல்லும் வனப்பகுதி சாலையை கடந்து சென்றது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அச்சமடைந்தனர். இதனால் வாகனங்களை சற்று தூரத்தில் நிறுத்திக்கொண்டனர். பின்னர் வாகனங்களில் இருந்தபடியே புலியை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

புலி ரோட்டை கடந்து சென்றதும் வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டனர். மேலும் இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News