மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர்

20 மாதங்களுக்கு பிறகு பள்ளி திறக்கபட்டதால் மேளதாளத்துடன் மரியாதை செலுத்திய ஆரத்தி எடுத்து பள்ளி குழந்தைகளை வரவேற்ற தலைமையாசிரியர்.

Update: 2021-11-01 06:00 GMT

மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்ட குழந்தைகள்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஆவுடையார் பாறை துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பூங்குழலி. 20 மாதங்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டதால் பள்ளி குழந்தைகளை மேளதாளத்துடன், பூ வீசி ஆரத்தி எடுத்து பள்ளிக்கு அழைத்து வரவேற்றார். ஆவுடையார் பாறை துவக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளை அவர்களது இல்லங்களுக்குச் சென்று முக்கிய வீதிகள் வழியாக மேளதாளத்துடன் பள்ளிக்கு அழைத்துச் வந்த தலைமையாசிரியர் மற்றும் பொதுமக்கள் குழந்தைகளை நடனமாடி வரவேற்றார்கள்.

Tags:    

Similar News