தீரன் சின்னமலை நினைவு நாள்: எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை

தீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2021-08-03 06:15 GMT

தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் ஆடிப்பெருக்கு 216 வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

அதையொட்டி அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரச்சலூர் அடுத்த ஓடாநிலை தீரன் சின்னமலையின் மணிமண்டபத்தில் உள்ள தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், தங்கமணி, ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம், பெருந்துறை எம்எல்ஏ ஜெயகுமார், மொடக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ., சிவசுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News