மொடக்குறிச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

மொடக்குறிச்சி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-12-16 17:00 GMT

பைல் படம்.

மொடக்குறிச்சி அடுத்த சின்னுசாமிபுரத்தை சேர்ந்தவர் வரதன். பந்தல் போடும் தொழிலாளி. இவரது மனைவி பெருமாயி. இவர்களுக்கு மலர்கொடடி என்ற மகளும், பிரதாப் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. இதனால் சில மாதங்களுக்கு முன்பு, பெருமாயி தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த வாரம் பெருமாயிடம் சமாதானம் பேசி, வீட்டிற்கு வரதன் அழைத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மகள் மலர்கொடியின் பிறந்தநாளையொட்டி வீட்டில் அனைவரும் ஒன்றாக காலை உணவு அருந்தி கொண்டிருந்தனர்.

அப்போது தம்பதியர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வரதன், பெருமாயியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார். அருகிலிருந்தவர்கள் மீட்டு, பெருமாயியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த வரதனை மொடக்குறிச்சி போலீசார் தேடி வந்தனர். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த வரதன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News