பவானிசாகர் அருகே உடல்நலம் பாதித்த கூலித்தொழிலாளி சாவு

பவானிசாகர் அருகே உடல்நலம் பாதித்த கூலித்தொழிலாளி திடீரென உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-12-12 09:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த விண்ணப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு திருமணமாகி ஒரு வருடத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். அதிலிருந்து ஜெயபால் மன வேதனையில் இருந்து வந்தார். மேலும் அவருக்கு குடி பழக்கம் இருந்து வந்தது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News