அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் திடீர் என மாயமானார்

அத்தாணி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-09-06 05:30 GMT

மாயமான பருவதம்.

ஈரோடு மாவட்டம் அத்தாணி அருகே உள்ள கரட்டூர்மேட்டையை சேர்ந்தவர் மயில்சாமி மனைவி பருவதம் (வயது 46) மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த மாதம் 1ம் தேதி, வீட்டை விட்டு வெளியே சென்றார்.பின் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும், கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மகன் மகேஷ்குமார் அளித்த புகாரின்பேரில் ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பருவதத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News