அந்தியூரில் சிபிஎம் தலைவர் காளியண்ணன் நினைவு தினம் அனுசரிப்பு

அந்தியூர் அருகேயுள்ள கீழ்வாணியில், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் காளியண்ணனின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-01-20 00:30 GMT

அத்தாணி அருகேயுள்ள கீழ்வாணியில், சிபிஎம் முதுபெரும் தலைவர் காளியண்ணனின் 26வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த அத்தாணி அருகேயுள்ள கீழ்வாணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  முதுபெரும் தலைவர் காளியண்ணனின் 26வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், மாவட்டக்குழு உறுப்பினர் மாரிமுத்து, அந்தியூர் தாலுக்கா கமிட்டி உறுப்பினர் பழனிச்சாமி, அந்தியூர் தாலுக்கா செயலாளர்  முருகேசன் ஆகியோர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், காளியண்ணனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இதைத்தொடர்ந்து, மாவட்ட செயலாளர் ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயராகவுன், காளியண்ணனின் புதல்வர்கள் ராமமூர்த்தி, சண்முகசுந்தரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோமதி, பவானி தாலுகா செயலாளர் மாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர் ஜெகநாதன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் வினிசா மற்றும் அந்தியூர், பவானி தாலுகா கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு காளியண்ணனின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்தனர்.

முன்னதாக, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி கட்சியின் செங்கொடியை ஏற்றினார். மேலும், காளியண்ணன் நினைவு தினத்தில் அந்தியூர் தாலுக்கா கமிட்டி சார்பில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்சி வளர்ச்சி நிதி மற்றும், பவானி தாலுக்கா கமிட்டி சார்பில் மக்களிடம் வசூலிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் கட்சி வளர்ச்சி நிதியும், மாவட்டச் செயலாளர் ரகுராமனிடம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News