பவானி அருகே கல்பாவி கிராமத்தில் வரும் மே.14ம் தேதி மனுநீதி நாள் முகாம்!

ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள கல்பாவி கிராமத்தில் வரும் மே.14ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது.;

Update: 2025-05-10 03:20 GMT

பவானி அருகே உள்ள கல்பாவி கிராமத்தில் வரும் மே.14ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

அரசு மாதந்தோறும் நடத்தக் கூடிய மனுநீதி நாள் முகாம் ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 2025ம் மாதத்திற்கான மனு நீதி நாள் முகாம் பவானி வட்டம் குறிச்சி உள்வட்டம் கல்பாவி கிராமம் கல்பாவி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வரும் மே 14ம் தேதி புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் அனைத்துத் துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். எனவே, இம்முகாமில் பொது மக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Similar News