தாளவாடி அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்தியவர் கைது

தாளவாடி அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை இருசக்கர வாகனத்தில் கடத்தி‌ வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-26 05:30 GMT

கைது செய்யப்பட்ட பங்காரு.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில், நேற்று மாலை தாளவாடி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி, போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 55 கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் மற்றும் 3 மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தொட்டகஜானூரை சேர்ந்த பங்காரு (38) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News