கடம்பூர் அருகே வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு பன்றிகளை வேட்டையாட அவுட்காய் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-01 14:15 GMT

சடையப்பன்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் கடம்பூர் போலீசார், தனிப்பிரிவு போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஏலஞ்சிபிரிவு என்ற இடத்தில் சந்தேகப்படும் படியாக ஒருவர் கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து, விசாரணை செய்ததில் ஏலஞ்சி பகுதியை சேர்ந்த சடையப்பன் (வயது 62) என்பதும், மேலும் கைப்பையில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட 11 'அவுட்காய்' எனப்படும் நாட்டு வெடிகுண்டு வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கடம்பூர் போலீசார் சடையப்பனை கைது செய்தனர்.

Tags:    

Similar News