சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்தவர் கைது

சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்து தப்ப ஓட முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2022-01-04 11:15 GMT

கைது செய்யப்பட்ட மாணிக்கம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள டி.என்.பாளையம் ராஜம்மாள் நகரை  சேர்ந்தவர் பூபதி. வெல்டிங் பட்டறை உரிமையாளர். சம்பவத்தன்று, பூபதி சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் அத்தாணி செல்லும்  பேருந்துக்காக  காத்திருந்தார். அப்போது பூபதியின் அருகில் நின்றிருந்த நபர் திடீரென பூபதியின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.300-ஐ திருடிக்கொண்டு தப்பி ஓடினார்.

இதைப்பார்த்து,  அதிர்ச்சி அடைந்து திருடன் என கூச்சலிட்டவாறே அந்த நபரை பூபதி துரத்தினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அந்த நபரை மடக்கி பிடித்து சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் சத்தியமங்கலம் தாண்டாம்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது 41) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணிக்கத்தை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News