நம்பியூர் அருகே வீட்டிலிருந்து மாயமான மாணவி மைசூரில் மீட்பு

நம்பியூர் அருகே வீட்டில் இருந்து மாயமான மாணவியை மைசூரில் மீட்ட போலீசார் திருமணம் செய்த காதல் கணவனை போக்சோவில் கைது செய்தனர்.

Update: 2022-05-27 05:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், நம்பியூர் திருமநாதம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது தேர்வு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்த மாணவி திடீரென மாயமானர். இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாணவியை தேடியதில், அந்த மாணவி மைசூர் தேவபுரா பகுதியை சேர்ந்த லாரி டிரைவரை காதலித்து வந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய மாணவி காதல் கணவனை திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் மீட்டு வந்த நம்பியூர் போலீசார் காதல் கணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News