கோபி, நம்பியூர் பகுதிகளில் நாளை (27ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்

நம்பியூர் , கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

Update: 2021-12-26 03:00 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், கோபி மின் கோட்டத்துக்கு உள்பட்ட நம்பியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. 

இதனால் மொட்டணம், குப்பிபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், மேட்டுக் கடை, பிலியம்பாளையம், கடாரை, இச்சிபாளையம், திட்டமலை, சூரியம்பாளையம், ஊத்துப்பாளையம், திருமநாதம்பாளையம், நல்லிகவுண்டன்பாளையம் என்.மேட்டுப்பாளையம், நம்பியூர்டவுன், கொண்ணமடை, வெங்கிட்டுபாளையம், காவிலிபாளையம், நாச்சிபாளையம், கோசனம், ஆலாம்பாளையம், தீர்த்தாம்பாளையம், செல்லிபாளையம், மூணாம்பள்ளி, கே.மேட்டுப்பாளையம், சொட்டமேடு, பொலவபாளையம், பழைய அய்யம்பாளையம், நாச்சிபாளையம், ஓணான் குட்டை, எல்லப்பாளையம், வேமாண்டம்பாளையம் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கோபி அருகே உள்ள கொளப்பலூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதனால் யூனிட்டி நகர், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், மல்லநாயக்கனூர், அங்கம்பாளையம், சாணார்பாளையம்,லிங்கப்பகவுண்டன் புதூர், போக்குவரத்து நகர், குமரன் காலனி, அம்மன்கோவில்பதி, கொளப்பலூர்,சமத்துவபுரம், அயலூர், தாழ்குனி, சொக்குமாரிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என  மின்வாரிய செயற்பொறியாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News