கொடிவேரி அணையில் ஜன.1 மற்றும் 2 - ஆம் தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை.

கோபிச்செட்டிப்பாளையம் அருகிலுள்ள கொடிவேரி அணையில் ஜன. 1 மற்றும் 2 தேதிகளில் சுற்றுலாபயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

Update: 2021-12-30 16:15 GMT

கோபி அருகேயுள்ள கொடிவேரி அணை

தமிழகத்தில் தற்போது பரவி வரும், ஒமிக்ரான் தொற்று காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையானது 75 நாட்களுக்கு பிறகு, கடந்த 27-ம் தேதி திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு கொடிவேரி அணைக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News